கொங்கு நாடு
நம் தமிழ்நாடு சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடுகளைப் போலவே தொண்டைநாடு, கொங்குநாடு என்ற இரண்டு நாடுகளையும் பழங்காலத்தில் கொண்டிருந்தது.
கொங்கு நாடு எப்பொழுதும் தனி எல்லைகள், வரலாறு, கலை, பண்பாடு, நாகரீகம், பழக்கவழக்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு விளங்கியது. இதனைப் பழங்கால இலக்கியங்களும், கல்வெட்டுகளும் உறுதிப்படுத்துகின்றன. நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் சில பகுதிகளும், திண்டுக்கல் மாவட்ட பழனிப்பகுதியும், திருச்சி மாவட்டக் குளித்தலைப் பகுதிகளுமே பழைய கொங்கு நாடாகும்.
வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று – கிடக்கும்
களித்தண்ட லைமேவும் காவிரிசூழ் நாடு
குளித்தண்ட லையளவு கொங்கு
என்பது ஒரு தனிப்பாடல். இதன் மூலம் கொங்கு நாட்டின் வடக்கு எல்லை பெரும்பாலை என்பதும், தெற்கு எல்லை பழனிமலை என்பதும், மேற்கு எல்லை வெள்ளியங்ககிரி மலை என்பதும், கிழக்கு எல்லை குளித்தலை என்பதும் பெறப்படும்.
தொண்டை நாடு, கொங்கு நாடு ஆகியவைகளைச் சேர்த்துத் தமிழ்நாடு ஐந்து என்ற கருத்து முன்பே இருந்தது. தண்டியலங்காரம் என்னும் நூலின் பாடல் ஒன்று.வியன் தமிழ்நாடு ஐந்து
என்று கூறுகிறது.
நறவேந்து நங்கை நலங்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியான் அல்லன் – துறையின்
விலங்காமை நின்ற வியன்தமிழ்நாடு ஐந்தின்
குலங்காவல் கொண்டடொழுகு
என்பது அப்பாடலாகும்.
சைவ சமய நூல்களில் மிகவும் தொன்மையானதாகக் கருதப்படுகின்ற திருமந்திரம்,
தமிழ் மண்டிலம் ஐந்து,
என்று கூறுகிறது. எனவே கொங்குநாடு தனிப்பிரிவு என்பது உறுதிப்படுகிறது.
கொங்கு நாடு நிர்வாக வசதிக்காக 24 உள் நாடுகளாகப் பிரிக்கப்படிருந்தது.. கொங்கில் பழமையான வரலாற்றுப் பெருமை உடைய நாடுகளில் பூந்துறைநாடும் ஒன்று..காவிரிக்கு மேற்கில் இருக்கும் காரணத்தால் மேல் கறைப் பூந்துறை நாடு என்று அழைக்கப்பட்டது,
கொங்கு 24 நாடுகள்
1.பூந்துறை
நாடு
|
9.தலைய
நாடு
|
17.வாழவந்தி
நாடு
|
2.தென்கரை
நாடு
|
10.தட்டய
நாடு
|
18.அண்ட
நாடு
|
3.காங்கேய
நாடு
|
11.பூவாணிய
நாடு
|
19.வெங்கால
நாடு
|
4.பொங்கலூர்
நாடு
|
12.அரைய
நாடு
|
20.காவடிக்கா
நாடு
|
5.ஆறை
நாடு
|
13.ஓடுவங்க
நாடு
|
21.ஆனைமலை
நாடு
|
6.வாரக்க
நாடு
|
14.வடகரை
நாடு
|
22.இராசிபுர
நாடு
|
7.திருஆவினன்குடி
நாடு
|
15.கிழங்கு
நாடு
|
23.காஞ்சிக்கோயில்
நாடு
|
8.மண
நாடு
|
16.நல்லுருக்கா
நாடு
|
24.குறுப்பு
நாடு
|
இதனைக் கீழ்வரும் நாட்டுப்பாடல் விளக்கும்
சொல்ல அரி தானபூந் துறைசைதென் கரைநாடு
தோன்றுகாங் கேயநாடு
தோலாத பொன்கலூர் நாடுதிகழ் ஆறையளி
தோய்ந்தவா ரக்கநாடு
வல்லமை செறிந்ததிரு வாவினன் குடிநாடு
மணநாடு தலையநாடு
வரதட்டை பூவாணி அரையநாடு ஒடுவங்கம்
வடகரை கிழங்கு நாடு
நல்லுருக் காநாடு வாழவந் தியும் அண்ட
நாடு வெங் காலநாடு
நாவலர்கள் சொல்கா வடிக்காநாடு ஆனைமலை
ராசிபுர நாடுநிதமும்
இல்லறம் வளர்ந்துதவி மல்குகாஞ் சிக்கோயில்
இயல்செறி குறுப்பு நாடு
இனியபுகழ் சேர்கொங்கு மண்டலந் தனிலான
இருபத்து நான்குநாடே
மேல்கரை பூந்துறை நாட்டு எல்லைகள்
மேல்கரைப் பூந்துறை நாட்டுக்கு வடக்கு எல்லை பவானி ஆறு,கிழக்கு எல்லை காவிரி ஆறு,தெற்கு எல்லை நொய்யல் என்னும் காஞ்சியாறு ஆறு,மேற்கு எல்லை சென்னிமலை ஆகியவைகளாகும்.இதனை,
உன்னிய தெற்கில் காஞ்சி உயர்நதி வடக்கு வாணி
உன்னிய தெற்கில் காஞ்சி உயர்நதி வடக்கு வாணி
பொன்னிமா நதியே கீழ்பால் புகன்றிடும் மேற்கு திக்கில்
சென்னிமாமலையே ஆகும் சிறக்குமுப் பத்திரண்டூர்
மின்னுமேல் கரையாய்க் கொண்டு விளங்கு பூந்துறை நன்னாடு
பூந்துறை நாட்டு ஊர்கள்
1.பூந்துறை
|
9.காளமங்கலம்
|
17.அரச்சலூர்
|
25.பேரோடு
|
2.வெள்ளோடு
|
10.குழாநிலை
|
18.விளக்கேந்தி
|
26.சித்தோடு
|
3.நசியனூர்
|
11.கிழாம்பாடி
|
19.ஈஞ்சம்பள்ளி
|
27.திண்டல்புதூர்
|
4.எழுமாத்தூர்
|
12.முடக்குறிச்சி
|
20.சத்திமங்கலம்
|
28.இலவமலை
|
5.பிடாரியூர்
|
13.அனுமன்பள்ளி
|
21.சேமூர்
|
29.திருவாச்சி
|
6.ஈங்கூர்
|
14.பழமங்கலம்
|
22.மங்கலம்
|
30.பயைம்பள்ளி
|
7.பெருந்துறை
|
15.குலவிளக்கு
|
23.வீரகநல்லூர்
|
31.ஓடைநிலை
|
8.சாத்தம்பூர்
|
16.காகம்
|
24.ஈரோடு
|
32.முருங்கத்தொழு
|
மேற்சொன்ன 32 பழம்பெரும் ஊர்களை கொண்டது பூந்துறை நாடு.இதனைப் பின்வரும் ஊர்தொகைப்பாடல் தொகுத்துக் கூறுகிறது. .
பூந்துறைசை வெள்ளோடை நசியனூர் எழுமாதை
புகழ்சேர் பிடாரிநகரம்
பூங்கமழும் ஈங்கியூர் பெருந்துறை சாத்தனூர்
பொன்காள மங்கலமதும்
ஆய்ந்ததமிழ் கூறும் குழாநிலை கிழாம்பாடி
ஆண்மைகொள் முடக்குறிச்சி
அனுமநகர் பழமங்கை குலவிளக்குக் காகம்
அறச்சலூர் விளக்கேத்தியும்
வேந்தர்மகிழ் ஈஞ்சநகர் சத்திமங் கலமதும்
மிக்கசேமூர் மங்கலம்
வீரநகர் ஈரோடு பேரோடு சித்தோடு
மிக்கான திண்டல்புதூர்
சேர்ந்தமழை பெய்திடும் இலவமலை திருவாச்சி
திகழ்பனசை ஓடாநிலை
தென்முரு ங்கைத்தொழுவு முப்பத்தி ரண்டூர்
சிறந்தபூந் துறைசை நாடே
பூந்துறை நாட்டுச்சபை
பூந்துறை நாட்டு நிர்வாகத்திற்காகவும்,நீதிபரிபாலனம் செய்யவும்,ஆலயங்களுக்கு கொடைகள் அளிக்கவும்,அளித்த கொடையின் பயன்கள் தவறாது ஆண்டவன்,திருக் கோவில்களை சென்றடையவும்,மேற்பார்வை செய்து நிர்வகிக்கவும் பூந்துறை நாட்டுச் சபை இருந்தது.முக்கியமான முடிவுகளை இச்சபை கூடி முடிவு எடுக்கும் 12-17 ஆம் நூற்றாண்டுக்கிடையில் இச்சபை இயங்கி நல்லறம் நடதியுள்ளது.
பூந்துறை நாட்டுச்சபையில் 32 ஊர்களுக்கு 56 உறுப்பினர்கள் இருந்தனர்.உறுப்பினர்களை வீடு என்று பெயரிட்டு அழைத்தனர்.
பூந்துறை நாட்டுச் சபையில் பூந்துறைக்கு 10 உறப்பினர்கள்,வெள்ளோட்டுக்கு 8 உறுப்பினர்கள் நசியனூர்க்கு 6 உறுப்பினர்கள்,எழுமாத்தூர்க்கு 4 உறுப்பினர்கள்.இவைநான்கும் நகரம் எனப்படும்.இந்த நான்கு நகரம் போக ஏனைய 28 ஊர்களுக்கும் ஒவொரு உறுப்பினர்கள், .ஆக மொத்தம் 56 உறுப்பினர்கள் கொண்டது பூந்துறை நாட்டுச் சபையாகும்
நற்கா விரிக்குமேல் கரைதனில் பூந்துறைசை
நளிர்கொண்ட வெள்ளோடையூர்
நசையனூர் எழுமாதை எனுமுயர் புகழ்பெரிய
நகரமொடு நான்கதாக
நளிர்கொண்ட வெள்ளோடையூர்
நசையனூர் எழுமாதை எனுமுயர் புகழ்பெரிய
நகரமொடு நான்கதாக
என்பது பழம்பாடல்ஒன்றில் கண்ட தொடர்களாகும்
(புலவர் செ.இராசு அவர்களின் நூலிலிருந்து)
No comments:
Post a Comment